search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவரம் அருகே கார்களில் குட்கா, புகையிலை கடத்திய 5 பேர் கைது
    X

    சோழவரம் அருகே கார்களில் குட்கா, புகையிலை கடத்திய 5 பேர் கைது

    • சோழவரம் அருகே உள்ள செம்புலிவரம், செங்காளம்மன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனை.
    • 3 கார்களை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    செங்குன்றம்:

    சோழவரம் அருகே உள்ள செம்புலிவரம், செங்காளம்மன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து வந்த 3 கார்களை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக சந்திராராம், நாராயன்லால், ஜெயபால், கணேசன், தங்க மாரியப்பன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 95 ஆயிரம் ரொக்கம், 100 கிலோ புகையிலை பொருட்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்களுடன் தொடர்பில் உள்ள குட்கா கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×