என் மலர்
உள்ளூர் செய்திகள்

குரோம்பேட்டையில் செல்போன் கடையில் தீ விபத்து
- மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
குரோம்பேட்டை மார்க்கெட், ராதா நகர் நாயுடு ஷாப் சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் ரமேஷ்.நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றார். இன்று அதிகாலை பூட்டி இருந்த செல்போன் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும், சிட்லபாக்கம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.எனினும் கடையில் இருந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story