search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலத்த மழை- புழல் ஏரிக்கு நீர்வரத்து 196 கனஅடியாக அதிகரிப்பு
    X

    பலத்த மழை- புழல் ஏரிக்கு நீர்வரத்து 196 கனஅடியாக அதிகரிப்பு

    • கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு, விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • புழல் ஏரிக்கு 65 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 196 கனஅடியாக அதிகரித்து இருக்கிறது.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் 6 ஆயிரத்து 754 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு, விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு 65 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 196 கனஅடியாக அதிகரித்து இருக்கிறது.

    இதே போல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 108 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 145 கன அடியாக உயர்ந்து இருக்கிறது. கன மழையாக தொடர்ந்து நீடித்தால் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645மி.கனஅடி. இதில் 2,850 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 145 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. ஏரியில் தற்போது 2,655 மி.கன அடி தண்ணீர் உள்ளது.ஏரியில் இருந்து 196 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. ஏரியில் தற்போது 609 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 95 கனஅடி தண்ணீர் வருகிறது. 50 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கனஅடி. இதில் 140 மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 26 கனஅடி தண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுகொள்ளளவான 500 மி.கனஅடி நிரம்பி வழிகிறது. ஏரிக்கு நீர் வரத்து 193 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலையும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர், பொன்னேரி, மீஞ்சூர், ஊத்துக்கோட்டை பகுதியில் விட்டு, விட்டு சாரல் மழை கொட்டியது.

    Next Story
    ×