search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் 7-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்- தீட்சிதர் கைது
    X

    சிதம்பரத்தில் 7-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்- தீட்சிதர் கைது

    • குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் ராம் என்கிற தில்லை நாகரத்தின தீட்சிதர். அவரது மகன் பத்ரிசன், (வயது 19).

    இவருக்கும், திருமண வயது பூர்த்தியடையாத சிறுமிக்கும் சிதம்பரத்தில் திருமணம் நடந்தது. சிறுமி தற்போது, 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இதுகுறித்து குழந்தை திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில், குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது.

    இது குறித்து சமூக நலத்துறை மகளிர் ஊர் நல அலுவலர் சித்ரா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், பத்ரிசன், இவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என 6 பேர் தில்லைநாகரத்தினம் தீட்சிதர், பத்ரிசன் சகோதரர் சூர்யா தீட்சிதர், சிறுமியின் தந்தை ராஜகணேசன் தீட்சிதர், சிறுமியின் தாய் தங்கம்மாள் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து உள்ளனர்.

    இவர்களில் சூர்யா தீட்சிதரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×