search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சரப்பாக்கத்தில் 19 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
    X

    அச்சரப்பாக்கத்தில் 19 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

    • தாமரை குளக்கரை பகுதியை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமான 3 வணிக வளாகங்கள் உள்ளன.
    • பேரூராட்சி நிர்வாகம் கடையின் குத்தகைதாரர்களுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கினர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் தாமரை குளக்கரை பகுதியை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமான 3 வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 33 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தாமரை குளம் வணிக வளாகத்தில் 3 கடைகள், பஜாரில் உள்ள பழைய வணிக வளாகத்தில் 7 கடைகள், பேரூராட்சி எதிரே உள்ள புதிய வணிக வளாகத்தில் 9 கடைகளை எடுத்தவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சரிவர வாடகை செலுத்தவில்லை. மொத்தம் 19 கடைகள் ரூ.8.50 லட்சம் வரை வாடகை தொகை நிலுவை வைத்துள்ளனர்.

    இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் கடையின் குத்தகைதாரர்களுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் வாடகை பணத்தை கட்டவில்லை. இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உத்தரவுப்படி வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக சென்று சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×