என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
60 ஆண்டு முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு
திருப்பத்தூர்:
கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த 1960ம்ஆண்டு முதல் 2022 ம்ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒரே நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சந்தித்துக் கொண்டனர் பின்னர் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து மகிழ்ந்தனர், பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது உள்ள ஆசிரியர்களை சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ..எஸ். கோவிந்தன் வரவேற்றார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீ ராமுலு தலைமை வகித்தார், நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி, மதியழகன், முன்னாள் எம்பி பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், உள்படை ஏராளமான கலந்து கொண்டு பேசினார்கள் பள்ளியில் படித்து தற்போது அரசு உயர் பதவிகள் மற்றும் தொழிலதிபர்களாக உள்ளவர்கள் தங்கள் செய்கின்ற பணிகள் குறித்து தெரிவித்து மகிழ்ந்தனர், பள்ளியில் மறைந்த முதல் தலைமை ஆசிரியர் கே.ராமமூர்த்தி, படத்தினை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியினை பெற்றோர்ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினர் எம் தேவராஜ், கணினி ஆசிரியர் டி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்கள் அனைவருக்கும் பொன்னா டை போர்த்தினார்கள் பின்னர் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டும் பள்ளி மேம்பாட்டிற்கு பண உதவி மற்றும் ஆலோசனை களை வழங்கினார்.
பின்னர் முன்னாள் மாணவர்களுக்கான சங்க தலைவர் மற்றும் நிர்வாகி களை தேர்ந்தெடுத்தனர் பின்னர் பழைய மாணவ மாணவிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தற்போதைய ஆசிரியர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்