search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடியில் பைக் திருட்டு
    X

    வாணியம்பாடியில் பைக் திருட்டு

    • கேமரா காட்சிகளுடன் புகார்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகு தியை சேர்ந்தவர் திவாகர். நியூடவுன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

    இவர் தனது பைக்கை தான் பணி புரியும் நிறுவனத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து திவாகர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×