search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரணாம்பட்டில் சாமி சிலையை கடத்தி சென்ற 6 பேர் கும்பல் கைது
    X

    பேரணாம்பட்டில் சாமி சிலையை கடத்தி சென்ற 6 பேர் கும்பல் கைது

    • போலீசார் விசாரணை
    • புதையல் ஆசையால் தோண்டிய பள்ளத்தில் கூழாங்கற்கள் கிடைத்தது


    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள மொரசப் பல்லி ஊராட்சியை சேர்ந்தது நலங்காநல்லூர் கிராமம் இந்த கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அதே கிராமத்தை சேர்ந்த சுனில் குமார் என்பவர்க்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

    பழமையான கோவில்

    இவரது நிலத்தில் பல நூற் றாண்டுகள் பழமை வாய்ந்த நாகாலம்மன் கோயில் நடுக்கல்லுடன் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் இந்த கோயிலுக்கு சென்று கிராம மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

    சாமி சிலைகள் திருட்டு

    மேலும் இங்கு புதையல் இருப்பதாக கிராம மக்கள் நம்பி வருவதாக கூறப்படு கிறது. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதியன்று மாலை சுமார் 3 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரில் வந்த 5 பேர் கும்பல் ஒன்று கடப்பாரை மண்வெட்டி கொண்டு நாகாலம்மன் கோயிலுக்கு சென்று சுமார் 2 அடி ஆழம் தோண்டி அங்கிருந்த 3 நாகாலம்மன் சிலைகளை காரில் கடத்தி சென்றனர்.

    இதனை பார்த்த அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் சென்று கேட்டபோது நிலத்தடி நீர் மட்டம் பார்க்க வந்ததாக ஏமாற்றி திசை திருப்பினர். தகவலறிந்த கிராம மக்கள் அவர்களை விரட்டி சென்ற போது மின்னல் வேகத்தில் காரில் தப்பித்து சென்றனர்.

    இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் நலங்கா நல்லூர் கிராம மக்கள் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு , சப் இன்ஸ் பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் காரில் சிலைகளை கடத்திய மர்ம கும்பல் யார் என தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மொரசப்பல்லி ஊராட்சி ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த ராம் (26) என்பவர் கும்பலுக்கு உடந்தையாக ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து ராமை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ராமின் சகோதரியின் கணவர் ராமச்சந்திரன் (32) குடியாத்தம் பார்வதியாபுரம் சேர்ந்தவர் இவரது நண்பரான கூட நகரம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (29) என்பவர் நண்பர் ராமச்சந்திரனிடம் பாழடைந்த பழைய கோயில் உள்ள தா தன்னிடம் புதையல் எடுக்கும் ஆட்கள் உள்ளனர் என கூறி பணம் தருவதாக ஆசை காட்டியதால் ராமச்சந்திரன் தன்னுடைய மைத்துனர் ராமிடம் நலங்கா நல்லூர் கிராமத்தில் உள்ள நாகாலம்மன் கோயில் குறித்து கூறிஉள்ளார்.

    இதைத்தொடர்ந்து, புதையல் எடுக்கும் மந்திர வாதியான அணைக்கட்டு தாலுகா டி.சி.குப்பம் அருகே வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த உழவர் உழைப்பாளர் நலச்சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ஹபிபுல்லா (45) மற்றும் அந்த அமைப் பைச் சேர்ந்த அவரது நண்பரான வேலுார் பாகாயம் பகுதியில் வசிக்கும் ஆதம்பாஷா (32) என்பவரும் ராமச்சந்திரன் மற்றும் விஜயனுடன் சேர்ந்து, மொரசப்பல்லி ராமலிங்காபுரத்தை சேர்ந்த ராம் (26), அவரது தந்தை செல் வம் (55) ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஹபி மச் புல்லாவுக்கு சொந்தமான நம்பர் பிளேட் இல்லாத கட் சொகுசு காரில் நலங்கா ல்நல்லுார் வந்துள்ளனர்.பின்னர், நாகாலம்மன் கோயிலுக்கு சென்று நிலத் தடி நீர்மட்டம் பார்க்க வந்ததாக கிராம மக்களி டம் பொய் சொல்லி, புதை யலுக்கு ஆசைப்பட்டு தோண்டியுள்ளனர்.

    ஆனால், அதில் வெறும் கூழாங்கற்கள் மட்டுமே கிடைத்ததாக வும், சிலைகளை கடத்து வதாக எண்ணி கிராம மக்கள் துரத்தியதால், காரில் தப்பியதாகவும் போலீசாரிடம் அந்த கும்பல் தெரிவித்தது.

    கூழாங்கற்கள் கிடைத்தது

    இதையடுத்து, பேர ணாம்பட்டு போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×