search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே ஆடு திருடிய 2  பேர் கைது
    X

    சிவகுமார், செல்வராஜ்.

    உடுமலை அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

    • 4 ந் தேதி இரவு அவர் வீட்டு பின்புறம் இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • உடுமலை போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார்.

    உடுமலை :

    உடுமலை அருகே கொடுங்கியத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46) இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 4 ந்தேதி இரவு அவர் வீட்டு பின்புறம் இருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து உடுமலை போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். இந்நிலையில் ஆண்டியூர் சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் 2 ஆடுகளுடன் வந்த ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த செல்வராஜ்( 52) குஞ்சிபாளையத்தை சேர்ந்த சிவகுமார் (33) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள்தான் மேற்கண்ட 2 ஆடுகளையும் திருடியது தெரிய வந்தது இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து ஆடுகளை மீட்டனர்.

    Next Story
    ×