search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 60ஆயிரம் பணம் திருட்டு - டீ மாஸ்டர் கைது
    X

    கைதான குமார். 

    அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 60ஆயிரம் பணம் திருட்டு - டீ மாஸ்டர் கைது

    • இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் அடுத்த அமராவதிபாளையம் கருமாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 39). இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 60 ஆயிரம் பணம், மற்றும் செல்போன் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வரும் திண்டுக்கல், வேடச்சந்தூரை சேர்ந்த குமார் (20) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×