search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகாபாடி கிராமத்தில் நவராத்திரி விழா
    X

    சிறப்பு அபிஷேகம் நடந்த காட்சி.

    முருகாபாடி கிராமத்தில் நவராத்திரி விழா

    • 9 நாள் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    போளூர்:

    போளூர் அடுத்த முருகா பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், ஸ்ரீ முருகாத்தம்மன் திருக்கோவில், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில்களில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் 9 நாள் அபிஷேகமும் தீபாராதனையும் செய்து பிள்ளையார் கோவில் அருகில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சரஸ்வதி பூஜையன்று கிராம தேவதை ஸ்ரீ அருள்மிகு முருகாத்தம்மன் சாமியை அலங்கரித்து சிறப்பு பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போளூர் வழக்கறிஞர் தினகரன் ஸ்ரீ முருகாத்தம்மன் கோவில் கமிட்டி தலைவர் மு.சா. வீரபத்திரன் என்கிற தேசபக்தன் முன்னாள் மணியம் வி.எஸ். ராஜாமணி ராவ், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பரமசிவம், ஊர் நாட்டாமை காரர்கள் ஆரிமுத்து, பெரியதம்பி, சங்கர், பன்னீர்செல்வம் முனிரத்தினம், கிருஷ்ணன், நடராஜன் மற்றும் சேகர், மதுரைவீரன்,பாபு, வைடூரியம் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×