என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி மூதாட்டி சாவு
- திருமணத்திற்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள மண்மலை பகுதியை சேர்ந்தவர் சென்னம்மா (70). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சென்னம்மா படுகாயம் அடைந்தார்.
சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story