search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளினிக்கில் மருத்துவம் பார்த்தபோது டாக்டர் மயங்கி விழுந்து சாவு
    X

    கிளினிக்கில் மருத்துவம் பார்த்தபோது டாக்டர் மயங்கி விழுந்து சாவு

    • தனியாக வாழ்ந்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இ.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் நக்கீரன் (வயது 55) டாக்டர்.

    இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும் மோகனப்பிரியா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சேவூர் கிராமத்தில் உள்ள தனது கிளிக்கில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த கொண்டிருந்த போது திடிரென மயங்கி விழுந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனு மதித்தனர். பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×