search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே வீட்டு சுவரில் முறிந்து விழுந்த மரம் - குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு
    X

    சுற்றுச்சுவர் மீது முறிந்து விழுந்த மரம்.

    பாவூர்சத்திரம் அருகே வீட்டு சுவரில் முறிந்து விழுந்த மரம் - குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேல்புறத்தில் கொடுக்காப்புளி மரம் ஒன்று நின்றது.
    • அதன் அருகில் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஆஸ்பெட்டாஸ் சீட்டால் மேற்கூரை அமைத்த வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேல்புறத்தில் கொடுக்காப்புளி மரம் ஒன்று நின்றது. அதன் அருகில் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஆஸ்பெட்டாஸ் சீட்டால் மேற்கூரை அமைத்த வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று திடீரென அந்த மரம் முறிந்து விழுந்தது. அது மகாலிங்கத்தின் வீட்டின் மேற்கூரையை தொட்டபடி காம்பவுண்ட் சுவற்றுக்குள் விழுந்தது. அந்த நேரத்தில் சிறுவர்கள் யாரும் அந்த பகுதியில் விளையாடாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் அருகில் இருந்த பொதுமக்களுடன் இணைந்து மரக்கிளைகளை அப்புறப்படுத்தி வீட்டில் மாட்டிக்கொண்ட மகாலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர்.

    Next Story
    ×