search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடி, மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
    X

    இடி, மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

    • மணப்பாறை அருகே இருவேறு சம்பவங்களில் இடி, மின்சாரம் தாக்கி இருவர் பலியாகி உள்ளனர்
    • னர் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சியம்மாள் (வயது 65). இவர் இன்று அதிகாலை இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது அந்த பகுதியில் நேற்று இரவு வீசிய பலத்த காற்று மற்றும் இடி, மின்னல் மழையால் மின் கம்பி ஒன்று அறுந்த நிலையில் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது.தரையில் இருந்து சுமார் 4 அடி கூட உயரம் இல்லாத நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியை கவனிக்காமல் அதனை மீனாட்சியம்மாள் கடக்க முயற்சித்து உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக அவரது உடல் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் அலறல் சப்தம் போடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.மேலும் இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அந்த பகுதியில் உடனடியாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.இதே போல் வையம்பட்டியை அடுத்த பெரிய வெள்ளபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (65). விவசாயியான இவர் நேற்று மாலை அருகில் உள்ள தோட்டத்தில் மாட்டை பிடிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது இடி மின்னல் ஏற்பட்ட நிலையில் திடீரென இடி தாக்கவே அதே இடத்தில் வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×