search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவரிடம் 2 பவுன் தங்க நகை பறிப்பு
    X

    டிரைவரிடம் 2 பவுன் தங்க நகை பறிப்பு

    • டிரைவரிடம் 2 பவுன் தங்க நகை பறித்தனர்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருச்சி,

    புதுக்கோட்டை மாவட்டம் களத்தூர் கிராமப்பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 32) இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மெட்டல் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திண்டிவனம் செல்வதற்காக லாரியில் மோகன்ராஜ் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகர் அருகே லாரியை மோகன்ராஜ் நிறுத்தினார். அப்பொழுது 3 மர்ம ஆசாமிகள் மோகன்ராஜ்யிடம் தகராறாரில் ஈடுபட்டு கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


    Next Story
    ×