search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்க  விண்ணப்பிக்கலாம்    -கலெக்டர் தகவல்
    X

    டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் தகவல்

    • டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

    திருச்சி

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைப்பது தொடர்பாக குற்றங்குறைகளற்ற திட்ட வட்டமான ஒழுங்குமுறை உடைய தெளிவான நடைமுறைகள் சென்ற ஆண்டு பின்பற்றப்பட்டது. அதேபோல் நடப்பு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    டவுன் ஹால் மைதானத்தில் பின்வரும் விவரப்படி அ, ஆ, இ. பகுதி என பாகுபாடு செய்ய ப்பட்டு "அ" பகுதியில் 80 சதுர அடி கொண்ட 37 தரைக்க டைகளும், "ஆ" பகுதியில் 80 சதுர அடி கொண்ட 19 தரை க்கடைகளும் "இ" பகுதியில் 80 சதுர அடி கொண்ட 24 தரைக்கடைகளும் அமை த்திட உத்தேசிக்க ப்பட்டுள்ளது.

    கடை ஒவ்வொன்றும் அனுமதி வழங்கப்படும் நாளிலிருந்து தீபாவளி பண்டிகை முடிவுறும் வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும். 'அ' பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ரூ.6,500 பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ரூ-5500 'இ' பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ரூ.4500ம் ஆகும்.

    தரை க்கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதைத் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத் தொகையை வருவாய் கோட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி என்ற பெயரில் வங்கி கேட்பு காசோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து திருச்சி கோட்டாட்சியரிடம் வருகிற 12-ஆம் தேதி பிற்பகல் 05.45 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

    தரை க்கடைகள் எண்ணிக்கை யைவிட மனு செய்தவர்களின் எண்ணி க்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில் "அ" பிரிவுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும். அதில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் "ஆ" பிரிவுடன் சேர்ந்து குலுக்கல் நடைபெறும். "ஆ" பிரிவில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் "இ" பிரிவில் சேர்ந்து குலுக்கல் நடத்தப்படும்.

    மேற்படி குலுக்கல் நகர வர்த்தக குழு பிரதிநிதிகள் மாவட்ட உபயோகிப்பாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சி, வரு வாய்கோ ட்டாட்சி யர் திருச்சி வருவாய் கோ ட்டாட்சியர் அலுவ லகத்தில் 14 தேதி நடத்த ப்படும் என தெரிவிக்க ப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×