search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்ஜினியரிங் மாணவி காதலுடன் ஓட்டம்
    X

    இன்ஜினியரிங் மாணவி காதலுடன் ஓட்டம்

    • இன்ஜினியரிங் மாணவி காதலுடன் ஓட்டம் பிடித்தார்
    • பெற்றோர் போலீசில் புகார்

    திருச்சி:

    திருச்சி பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இ.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அருகாமையில் உள்ள கடைக்கு செல்வதாக அந்த மாணவி புறப்பட்டுச் சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். பின்னர் தோழிகளிடம் விசாரித்த போது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த டோனி என்ற வாலிபரை அவர் காதலித்து வந்ததாக தகவல் கிடைத்தது. இதனால் காதலுடன் அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, அதன் பேரில் சோமரசம்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×