search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    திருச்சியில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

    • திருச்சி தெற்கு காட்டூர் திலகர் தெருபகுதியைச் சேர்ந்தவர் பெர்நாத் சந்தன மேரி (வயது 65 ).
    • கண்ணிமைக்கும் நேரத்தில் சந்தன மேரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    திருச்சி :

    திருச்சி தெற்கு காட்டூர் திலகர் தெருபகுதியைச் சேர்ந்தவர் அமலதாஸ். இவரது மனைவி பெர்நாத் சந்தன மேரி (வயது 65 ).

    இவர் நேற்றைய தினம் தனது வீட்டின் முன்பக்க கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் சந்தன மேரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்தார்.

    உடனே சந்தன மேரி திருடன் திருடன் என கத்தினார். இதை எடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்தனர். இதனை பார்த்த கொள்ளையன் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு நகையுடன் தப்பி ஓடினார்.

    இது தொடர்பாக சந்தன மேரி கொடுத்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.

    Next Story
    ×