என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
- மணப்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
- ஒப்பந்த பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் துப்புரவு பணியை மேற்கொள்ள 176 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 69 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 107 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.இந்நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்தும், திடீரென 15 ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், பணிச்சுமை அதிகரிப்பதைக் கண்டித்தும், ஒப்பந்த பணியாளர்களிடம் குப்பையை எடை போட்டு அதற்கு தகுந்தார் போல் சம்பளம் நிர்ணயிக்கும் முறையை கைவிட வேண்டும்,நகராட்சி சட்டப்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் பேருந்து நிலையம் மற்றும் விராலிமலை ரோடு ஆகிய பகுதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் பணி வழங்கியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்