search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு
    X

    குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு

    • ஆற்றில் கொண்டு போய் விட்டனர்
    • வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி மலையில் ராஜா கோட்டை, ராணி கோட்டை ஆகியவை உள்ளது. இந்த மலையில் பாம்பு உள்பட ஏராளமான உயிரினங்கள் உள்ளன.

    அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. மலைப்பகுதிக்கு கீழ் ஏராளமானோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சாரை பாம்பு ஒன்று வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

    அப்போது ஒருவரின் வீட்டுக்குள் ஊர்ந்து சென்றது.

    பாம்பு வருவதை வீட்டுக்குள் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் அப்பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர் பாம்பை லாவகமாக பிடித்தார். பிடிபட்ட பாம்பை ஆற்றில் கொண்டு போய் பத்திரமாக விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×