search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரதராமியில் கெங்கையம்மன் சிரசுத் திருவிழா
    X

    பரதராமியில் கெங்கையம்மன் சிரசுத் திருவிழா

    • ஊர்வலமாக கொண்டு சென்றனர்
    • பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி கெங்கையம்மன் திருவிழா நேற்று நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 16-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்றுமுன்தினம் அம்மனுக்கு பொங்கல் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழா முன்னிட்டு அம்மன் சிரசு நேற்று காலையில் அங்க னாம்பள்ளி கிராமத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தது. தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    கெங்கையம்மன் திருவிழாவில் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குசலகு மாரிசேகர், ஊராட்சிமன்ற தலைவர்கள் கேப்டன் கேசவேலு, கவுசல்யாஉமாகாந்தன், சக்திதாசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இந்திராகாந்தி, மஞ்சுநாதன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பத்ரிநாத், ரமேஷ், தி.மு.க. பிரமுகர்கள் அண்ணாதுரை, ஆனந்தன், ராஜ்கமல், கிராம நிர்வாகஅலுவலர் சசிகுமார், ஊராட்சிமன்ற உதவியாளர் வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×