search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஆர்.பி. விலையில் மதுபானங்கள்
    X

    எம்.ஆர்.பி. விலையில் மதுபானங்கள்

    • விற்பனை அறிவிப்பு பலகை சில மணிநேரத்தில் அகற்றம்
    • மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

    அணைக்கட்டு:

    டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அரசு நிர்ணயித்துள்ள விலைப்படி விற்பனை செய்யப்படாமல் கூடுதலாக பணம் கேட்கப்படு கின்றதாக புகார்கள் எழுந்தது.

    இந்த நிலையில் சில மாதங்களாக ஆங்காங்கே உள்ள கடைகளில் கூடுதலாக மதுபாட்டில்கள் ஒன்றுக்கு ரூ. 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாட்டிலில் குறிப்பிட்டுள்ள விலையில் மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பென்னாத்தூரில் உள்ள அரசு மதுபானக்கடை முன்பு நேற்று எம்.ஆர்.பி விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என அட்டைகளில் எழுதி தொங்கவிட்டுள்ளனர்.

    இதனை மது பிரியர்கள் வரவேற்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    ஆனால் சில மணி நேரத்திலேயே தொங்க விடப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×