search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தப்பி சென்ற சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு
    X

    தப்பி சென்ற சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

    • போலீசார் விசாரணை
    • பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்

    வேலூர்:

    வேலூர், சத்துவாச்சாரி அடுத்த மூலக்கொல்லை பகுதியில் நம்பிக்கை இல்லம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழ்மை மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காப்பகத்தில் இருந்த 2 சிறுவர் மற்றும் 2 சிறுமிகள், துணி பையுடன் நேற்று இரவு தப்பி சென்றனர். எங்கே செல்வது என தெரியாமல் 4 பேரும் வள்ளலார் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோர பிளாட்பாரத்தில் இரவு முழுவதும் தூங்கி உள்ளனர்.

    இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் 4 பேரையும் மீட்டு, சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், காப்பகத்தில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 4 சிறுவர்களையும் மீண்டும் காப்பகத்திலேயே ஒப்படைத்தனர்.

    Next Story
    ×