என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்வேறு திட்ட பணிகளுக்கு மத்திய அரசு 60 சதவீதம் நிதி வழங்குவதை மறைப்பது ஏன்?
- வேலூரில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பேச்சு
- மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம்அளித்தல் துறை இணை மந்திரி நாராயண சாமி கலந்து கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி பேசியதாவது:-
மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக 60 சதவீதம் நிதி வழங்குகிறது. மாநில அரசு 40 சதவீத நிதி வழங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் மத்திய அரசு வழங்கும் நிதி குறித்து ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பினார். மத்திய அரசு வழங்கும் நிதியை ஏன் மறைக்கிறீர்கள்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசு நிதி உதவி பெறும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.ஒருதுறை மட்டுமே பங்கேற்பது ஏற்புடையதாக இல்லை என்றார். தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய மந்திரி ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்