search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் அருகே தொழிலாளி தற்கொலை
    X

    வேலூர் அருகே தொழிலாளி தற்கொலை

    • மகளின் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகை சித்தர் தெருவை சேர்ந்தவர் அன்பு ஜீவ நேசன் (வயது 54).

    இவரது மனைவி ஸ்டெல்லா தேவி. கணவன் மனைவி இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    அன்பு ஜீவநேசன் மகள் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். அன்பு ஜீவ நேசனால் மகளின் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் அன்பு ஜீவன் நேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அன்பு ஜீவநேசன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகளின் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் அன்பு ஜீவ நேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×