search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமமக்கள் சாலை மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    கிராமமக்கள் சாலை மறியல்

    • அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியம், காடந்தேத்தி ஊராட்சியில் 190 மீள்குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்பில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் காடந்தேத்தி பஸ் நிலையத்தில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்ததை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×