search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழாவில் வாலிபர்-பெண் மீது தாக்குதல்
    X

    கோவில் திருவிழாவில் வாலிபர்-பெண் மீது தாக்குதல்

    • கோவில் திருவிழாவில் வாலிபர்-பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் உள்ள முனியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடந்தது. இதில் நாதன்(வயது25) என்பவரின் குடும்பத்தினர் காவடி, முளைப்பாரி எடுத்து வந்தனர். அவர்களுக்கு முன்பு நாதன் கூச்சலிட்டபடி ஆடி பாடிக்கொண்டு வந்த தாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த சகோத ரர்களான பாலசுப்பிர மணியன்(48), தர்மர்(49) ஆகியோர் நாதனை கூச்சலி டாமல் செல்லும்படி கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை பிரித்து அழைத்துச் சென்றனர்.

    இந்தநிலையில் சிறிது நேரத்தில் முளைப்பாரி வேறு தெருவில் வந்தபோது பாலசுப்பிரமணியன் மற்றும் தர்மர், நாதனை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாதன் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து சகோதரர்களை தேடி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே உள்ள சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள்(50). இவர் தந்தை தனக்கு அளித்த பூர்விக சொத்தை சகோதரர் மாரிமுத்துவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த சொத்தை மற்றொரு சகோதரி ஜான கிக்கு கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த சொத்து தொடர்பாக காளியம்மாள் வட்டாட்சியர் அலுவல கத்தில் வில்லங்க புகார் பதிவு செய்தார்.

    இந்த நிலையில் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக காளியம் மாள் வந்தார். அப்போது ஜானகி, தனது கணவர் முப்பிடாதியுடன் சேர்ந்து காளியம்மாளை தாக்கினர். இதில் காயமடைந்த காளி யம்மாள், ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதுகுறித்து காளியம் மாள் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×