search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
    X

    கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

    • கோவில் திருவிழாவில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 20). அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று அந்த பகுதியில் ராஜகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அங்கு முளைப்பாரி எடுத்து செல்வதை மனோஜ் பார்த்து கொண்டிருந்தார். அவர் காலில் செருப்பு அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் செருப்பு அணிந்து பந்தலுக்குள் நிற்கக்கூடாது என கூறி வெளியே செல்லும்படி கூறி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜபாண்டி, மனோஜை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மனோஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அவர் கொடுத்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×