search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    X

    குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

    • குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
    • நிர்வாகத்தில் தவறு நடப்பதாகவும் புகார் வந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் நாரசபை கூட் டம் தலைவர் மாதவன் தலை மையில் நடைபெற்றது துணைத்த லைவர் தனலட் சுமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நக ராட்சி நிர்வாக அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள வில்லை.

    கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் மதியழ கன், பால்பாண்டி, கலையர சன் உள்ளிட்டோர் வார்டு மக்களின் தேவைகளை கடந்த கூட்டங்களில் தெரிவித்தும் அதுபற்றி எந்த தீர்மானமும் கொண்டு வராத நிலை ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

    கவுன்சிலர் முத்துராமன் சொத்து வரி கட்டிய வர்களுக்கும் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளது வரி கட்டா விட்டால் வீட்டை பூட்டி விடுவோம் என்று மிரட்டும் நிலை உள்ளதாக புகார் கூறினார். இதற்கு பதிலளித்த தலைவர் மாதவன் இதுபற்றி தனக்கு தகவல் இல்லை என்றும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் மக்கள் கோரிக்கைகளை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நகராட்சிநிர்வாகம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விடும் என்றார். நக ரில் பல்வேறு பகுதி களில் குடி நீருடன் கழிவுநீர் கலப்பதாக கவுன்சிலர்கள் ஜெயக்குமார், முத்து லட்சுமி, ராமச்ச ந்திரன் உள்ளி ட்டோர் புகார் தெரிவித்தனர். கவுன்சிலர் பிருந்தா தனது வார்டு பகுதியில் மக்கள் கூறிய பிரச்சினைகள் பற்றி நகரசபை நிர்வா கத்திடம் தெரிவித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறியதுடன் எனது வார்டு மக்கள் உனக்கு ஓட்டு போட்டு எங்களுக்கு என்ன சேவை செய்தாய் என்று கேள்வி எழுப்பும் நிலை உள்ள தாக வேதனை தெரிவித்தார்.

    கவுன்சிலர் மதியழகன் இதேநிலை அனைத்து கவுன் சிலர்களுக்கும் ஏற்பட்டுள்ள தாக கூறினார். நகராட்சி பூங்காவில் மாவட்ட நிர்வா கத்தின் அறிவுறுத்தலில் வைக்கப் பட்ட விளம்பர பலகை சேதப்படுத்தப்பட்ட நிலை யில் அது பற்றி விசாரணை நடத்தாமல் மீண்டும் விளம் பர பலகை வைப்பதற்கு டெண்டர் கோரியதற்கு கவுன்சில ர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    கவுன்சிலர் ஆறுமுகம் நகர சபை நிர்வாகத்தில் தவறு நடக்கிறது என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் விவாத த்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×