search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாவலூர் அருகே கணவர் திட்டியதால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    திருநாவலூர் அருகே கணவர் திட்டியதால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

    • திருநாவலூர் அருகே கணவர் திட்டியதால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வளைகாப்பு செய்ய இருப்பதால் வீட்டில் களவு சாதங்கள் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா பா.கில்லனுர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு ஏழுமலை. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு அம்சலேகா என்ற மனைவியை திருமணம்செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பாபு ஏழுமலையின் சகோதரிக்கு வளை காப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்த நிலையில் பாபு ஏழுமலை அம்சலேகாவிடம் எனது சகோதரிக்கு வளைகாப்பு செய்ய இருப்பதால் வீட்டில் களவு சாதங்கள் செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு அம்சலேகா, நான் ஏன் செய்ய வேண்டும், நான் செய்ய மாட்டேன் என்று மறுத்துள்ளார். இந்த சம்பவம் இருவருக்கும் இடையே கருத்து வேறு பாட்டை ஏற்படுத்தியது.

    அம்சலேகாவை பாபு ஏழுமலை திட்டி அடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அம்சலேகா மன வருத்தம் அடைந்தார். இந்த நிலையில் பாபு ஏழுமலை வெளியில் சென்ற போது வீட்டின் பின்புறம் வேப்ப மரத்தில் புடவையால் தூக்கு போட்டு அம்சலேகா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அம்சலேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாபு ஏழுமலையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×