search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பள்ளியில்  உலக ஈரநில தினவிழா
    X

    உலக ஈரநில தினவிழா நடைபெற்றபோது எடுத்த படம்.

    உடன்குடி பள்ளியில் உலக ஈரநில தினவிழா

    • மானாடு தண்டுபத்து சுதந்திர நகர் பள்ளியில் “உலக ஈரநில தினம்” கொண்டாடப்பட்டது.
    • ஈர நிலத்தை பாதுகாப்பதில் மரங்களின் பங்கு குறித்து அபிராமி பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் மானாடு தண்டுபத்து சுதந்திர நகர் அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் "உலக ஈரநில தினம்" கொண்டா டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஈர நிலம் பூமிக்கு ஆற்றும் பங்கு குறித்து மாணவ- மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், ஈர நிலத்தை பாதுகாப்பதின் அவசியத்தையும் அது குறைவதால் ஏற்படும் தீமைகளையும், ஈர நிலத்தை பாதிக்கும் காரணிகளை போக்கும் வழிமுறை களையும் மாணவர்கள் அறியும் வகையில் அறிவியல் ஆசிரியர் நடராஜ் பேசினார். ஈர நிலத்தை பாதுகாப்பதில் மரங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்று அபிராமி பேசினார். தொடந்து ஆசிரியர்கள் முருகன், வசந்தா, முருகலட்சுமி ஆகியோர் ஈரநிலத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இறுதியில் ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளித்தலைமை ஆசிரியர் ஜெயராஜ் செய்திருந்தார்.

    Next Story
    ×