search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
    X

    கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

    • ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் ஏரிக்கரையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் கையில் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 27), என்பது தெரிந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×