search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே  சாராயம் விற்ற இளைஞர் கைது
    X

    கைது செய்யப்பட்ட அஜித்.

    கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற இளைஞர் கைது

    • கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசை கண்டதும் இளைஞர் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீலமங்கலம் பிரிவு சாலை அருகே போலீசை கண்டதும் இளைஞர் ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நீலமங்கலம் பிரிவு சாலை அருகே உள்ள நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் அஜித் (வயது 22) என்பதும், பையில் வைத்து சாராயம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 55 லிட்டர் எரி சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் அஜித்தை கைது செய்தனர்.

    Next Story
    ×