search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது
    X

    திருக்கோவிலூர் அருகே காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது

    • சின்னராசு ,சக்கரவர்த்தி ஆகியோர் விக்ரம் என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவிகொளப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 29). அதே ஊரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தியும் அதே ஊரில் உள்ள பெருமாள் நாயக்கர் வீதி யைச் சேர்ந்த விக்ரம் (30) என்பவர் நிலத்தில் காப்பர் வயரை திருடினர். அப்போது கையும் களவுமாக சின்னரா சாவை பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 5 கிலோ காப்பர் கம்பி ஆகியவற்றையும் போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் போலீசார் சின்னராசுவை கைது செய்தனர். தப்பிவிட்ட சக்கரவர்த்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×