என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
வழி சொல்லு முருகா...
- ராத்திரி தூங்கி காலையில் எழுந்து பார்த்தால் பாய் ஒரு பக்கம் கெடக்கும்...
- தலையணை வேற பக்கம் கெடக்கும். நானு அந்த ரெண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் கெடப்பேன்.
"நிம்மதியாக..சந்தோஷமாக வாழ வழி சொல்லு முருகா..."
"பக்தா மூணு வேளையும் ஒழுங்கா பசிக்குதா... ?
சாப்பாடும் கிடைக்குதா... ?
சாப்பிட்டது ஜீரணம் ஆகுதா..?"
"ஆமாம் முருகா.... மூணு வேளையும் நல்லா கொட்டிக்கிறேன்....
இது போக காபி டீ... வடை, பஜ்ஜி , சமோசா, சிப்ஸூ, பப்ஸூ னு எல்லாம் போயிட்டு இருக்கு...
ஞாபக சக்தியை விட ஜீரண சக்தி அதிகமாக இருக்கு முருகா...."
"நல்லா தூக்கம் வருதா... ?"
"அத ஏன் கேட்குற முருகா... ராத்திரி தூங்கி காலையில் எழுந்து பார்த்தால் பாய் ஒரு பக்கம் கெடக்கும்.. தலையணை வேற பக்கம் கெடக்கும். நானு அந்த ரெண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் கெடப்பேன். அதிலும் வாய பே ன்னு வச்சுட்டு தூங்குறேன்..."
"ஏன்டா அவனவன் சோறு கிடைக்காம... கிடைத்தாலும் நினைத்த நேரத்திற்கு சாப்பிட முடியாம... அப்படியே சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாம.... தூங்கினா தூக்கம் வராம நாயா பேயா அலைஞ்சுட்டு இருக்கானுங்க... இதுல நீ இன்னும் நிம்மதி சந்தோஷம் கேட்குற... உன்னை எல்லாம்...."
"அதில்ல முருகா....",
"இப்ப பேசாம போறீயா.. இல்ல வேல எடுத்து வாயில சொருகவா..."
"முத்தைதிரு பத்தித்திரு...."
"டேய் பாட்டு பாடாம போடா....
வந்தேன் ன்னா அம்புட்டுத்தேன்...."
-ஜெய் ஸ்ரீராம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்