search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை
    X

    முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

    • கடந்த ஆகஸ்டு மாதம் ஒருவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நகை கடைக்காரர் ஒருவரை கைது செய்தனர்.

    மும்பை :

    மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் ஆஸ்பத்திரியை குண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டி.பி. மார்க் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடிவருகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் இதேபோல ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஒருவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நகை கடைக்காரர் ஒருவரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு மீண்டும் மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×