search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.3 ஆயிரம் பரிசு கூப்பனை கொடுத்து காங்கிரஸ் என்னை தோற்கடித்தது: நிகில் குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு
    X

    ரூ.3 ஆயிரம் பரிசு கூப்பனை கொடுத்து காங்கிரஸ் என்னை தோற்கடித்தது: நிகில் குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு

    • குமாரசாமி மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பார்த்து வியந்தேன்.
    • நான் தேர்தலில் தோற்றாலும், உங்களுடன் எப்போதும் இருப்பேன்.

    ராமநகர் :

    ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் சென்னப்பட்டணாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் குமாரசாமி, நிகில் குமாரசாமி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நிகில் குமாரசாமி பேசியதாவது:-

    என் தந்தை உங்களை நம்பி போட்டியிட்டார். அவரை நீங்கள் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். குமாரசாமி மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பார்த்து வியந்தேன். ராமநகர் மாவட்டத்திலேயே இங்கு தான் அதிக விசுவாசிகள் உள்ளனர். நான் தேர்தலில் தோற்றாலும், உங்களுடன் எப்போதும் இருப்பேன். எங்களுக்கு தோல்வி புதிதல்ல. குமாரசாமி கடந்த 2004-ம் ஆண்டு முதல் ராமநகர் தொகுதியில் வெற்றி பெற்று வளர்ச்சி பணிகளை செய்து வந்தார்.

    ஆனால் இந்த முறை மக்கள் வேறு முடிவை எடுத்துவிட்டனர். இதனால் நான் தோல்வி அடைந்துள்ளேன். மண்டியா நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படி தான் நான் தோற்கடிக்கப்பட்டேன். ராமநகர் தொகுதியில் ரூ.3 ஆயிரம் பரிசுக்கூப்பன்களை மக்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் கொடுத்து என்னை தோற்கடித்தார். வருங்காலத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×