search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கும் எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது: ராகுல் காந்தி
    X

    ராகுல் காந்தி

    இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கும் எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது: ராகுல் காந்தி

    • கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் ராகுல்காந்தியுடன் கலந்துரையாடல்.
    • தேசிய கல்விக் கொள்கை குறித்த பிரச்சினைகளை எழுப்பியதாக தகவல்.

    மாண்டியா:

    காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய அவரது யாத்திரை, கேரளா மாநிலத்தை கடந்து தற்போது கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பல கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    அப்போது இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கி கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளை அச்சுறுத்தும் எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது என்று ராகுல்காந்தி அவர்களிடம் தெரிவித்தாக காங்கிரஸின் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளரான கார்கே தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரின் தாய்மொழியும் முக்கியம் என்றும், அனைத்து மொழிகளையும் காங்கிரஸ் மதிப்பதாகவும், அரசியலமைப்பில் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று ராகுல்காந்தி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

    இந்த உரையாடலில் பங்கேற்றவர்கள் தங்களுக்கு காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை என்பதை உறுதிப்படுத்திய தாகவும், அரசியலமைப்பைக் காப்பாற்றும் யாத்திரையில் பங்கேற்கிறோம் என்று தெரிவித்ததாகவும் கார்கே கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதால கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை எழுப்பியதாகவும் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

    Next Story
    ×