என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு
BySuresh K Jangir7 Oct 2022 6:36 AM GMT
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,908 பேர் நலமாகி உள்ளனர்.
- இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 47 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 4-ந் தேதி 1,968 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 2,468, நேற்று 2,529 ஆக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,997 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 6 ஆயிரத்து 460 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,908 பேர் நலமாகி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 47 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 30,362 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,920 குறைவாகும். தொற்று பாதிப்பால் மேலும் 9 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,754 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X