என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
வீட்டின் கதவை திறந்தபோது முற்றத்தில் நின்ற புலி- பீதியில் அலறிய கிராம மக்கள்
BySuresh K Jangir22 March 2023 8:45 AM GMT
- முதலில் பூனை என்று நினைத்தவர் அருகில் சென்று பார்த்த பின்னர் தான் அது புலி என தெரிந்து கொண்டார்.
- வனத்துறையினர் வரும் முன்பு புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா கரிகாயம் பகுதியை சேர்ந்தவர் சோமராஜன். இவரது வீட்டின் அருகில் ஏராளமான வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. சம்பவத்தன்று காலையில் சோமராஜன், தூங்கி எழுந்து வீட்டின் முன்பக்க கதவை திறந்தார். முற்றத்தில் பூனை போன்ற விலங்கு நிற்பதை கண்டார்.
முதலில் பூனை என்று நினைத்தவர் அருகில் சென்று பார்த்த பின்னர் தான் அது புலி என தெரிந்து கொண்டார். உடனே அவரும் குடும்பத்தாரும் கதவை பூட்டி கொண்டு அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களும் புலியை பார்த்து அலறியடித்து ஓடினர். மேலும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் வரும் முன்பு புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புலி நுழைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X