என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
லக்கேஜ்களை தூக்கி வீசும் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள்- பக்தர்கள் அதிர்ச்சி
- உடைமைகளை அலட்சியமாக தூக்கி எறியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தேவஸ்தான ஊழியர்கள் லக்கேஜ்களை தூக்கி வீசும் கைவிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உடைமைகள், தேவஸ்தானம் சார்பில் லக்கேஜ் கவுண்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் முடிந்து வரும்போது திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில், லக்கேஜ்களை தேவஸ்தான ஊழியர்கள் தூக்கி வீசிய நிகழ்வு பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வேனில் கொண்டு வரப்பட்ட லக்கேஜ்களை, லக்கேஜ் கவுண்டரில் இறக்கும்போது, அவற்றை வேகமாக தூக்கி எறிவது பதிவாகியிருக்கிறது.
இது கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக வந்த தன்னார்வலர்களின் லக்கேஜ்கள் என்று கூறப்படுகிறது. இது பிரம்மோற்சவ விழாவின்போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது.
உடைமைகளை தூக்கி எறியும் போக்கை தேவஸ்தான ஊழியர்கள் கைவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களை தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்