search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நேற்று எருமை மாடுகள்.. இன்று பசு மாடு: கால்நடை மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்
    X

    நேற்று எருமை மாடுகள்.. இன்று பசு மாடு: கால்நடை மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்

    • கடந்த இரண்டு நாட்களில் 2-வது முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கால்நடை மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
    • எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை குஜராத்தின் வத்வா - மணிநகர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே எருமை மாடுகள் வந்தன. அவற்றின் மீது ரெயில் வேகமாக மோதியது. இதில் ரெயில் என்ஜினின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. பின்னர் என்ஜின் சரி செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று வந்தே பாரத் ரெயில், ஆனந்த் ரெயில் நிலையம் அருகே கால்நடை மீது மோதியதில் அதன் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளது. நேற்று எருமை கூட்டத்தின் மீது மோதியதில் என்ஜினின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், இன்று பசு மாடு ஒன்றின் மீது ரெயில் மோதியுள்ளது. சிறிய அளவு சேதம் என்பதால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் 2-வது முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

    நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு பின், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மேற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது.

    தண்டவாளத்தில் கால்நடைகள் மீது மோதுவது தவிர்க்க முடியாதது என்றும், அதிவேக ரெயிலை வடிவமைக்கும்போது இந்த பிரச்சனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பதாகவும் ரெயில்வே மந்திரி அஷ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×