search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாயை போல் புதிதாக போடப்பட்ட தார் சாலையை சுருட்டும் கிராம மக்கள்- வைரலாகும் வீடியோ
    X

    பாயை போல் புதிதாக போடப்பட்ட தார் சாலையை சுருட்டும் கிராம மக்கள்- வைரலாகும் வீடியோ

    • 38 வினாடிகள் கொண்ட வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    • தரமற்ற சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் சமீபத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்ட இந்த சாலையின் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலை போடப்படுவதாக ஒப்பந்ததாரர் கூறினார்.

    இந்நிலையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை தார்பாய் போன்று அப்பகுதி மக்கள் வெறும் கைகளால் தூக்குவது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 38 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தரமற்ற இந்த சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் மகாராஷ்டிரா அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.




    Next Story
    ×