search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மருத்துவ பயன்கள் கொண்ட அன்னாசி பழம்
    X

    மருத்துவ பயன்கள் கொண்ட அன்னாசி பழம்

    • ஒரு கப் அன்னாசி பழத்தில் மிக அதிக வைட்டமின் ‘சி’ சத்து உள்ளது. அன்றாட தேவைக்கும் மிக கூடுதல் அளவில் கிடைக்கின்றது.
    • எதனையும் அதன் நன்மை தீமைகளை நன்கு அறிந்து குறிப்பிட்ட அளவில் உட்கொள்வதே சிறந்தது.

    பைன் ஆப்பிள் என்று எங்கும் கூறப்படுவது நம்ம அன்னாசி பழம். பழம் என்றாலே சுவையானதுதான். இந்த பழத்தினை அப்படியே அறிந்து துண்டுகளாக்கி உண்ணலாம். ஜூஸ் எடுத்தும் குடிக்கலாம். சமையலிலும் சேர்க்கலாம். பொதுவில் பழங்களை நறுக்கி உண்ணும் முறையே சிறந்தது. ஒரு மீடியம் கப் அளவு எடுத்துக் கொண்டு மிளகு சீரக தூள் தூவி உண்ணலாம்.

    பழ கலவையில் சேர்க்கலாம். சிறிது பன்னீர் துறுவி கலந்தெடுத்தும் குடிக்கலாம். ஆனால் இந்த பழத்தினை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லதல்ல என்பதற்காகவே இதனை உண்ணும் முறைகளை கூறி வலியுறுத்தப்படுகின்றது. இதன் பலன்களை படித்தால் நாம் மீண்டும் இதனை முறையாய் உண்ண ஆரம்பித்து விடுவோம்.

    வைட்டமின்கள், தாது உப்புகளும், சத்துகளில் காப்பர், மங்கனீஸ், கால்ஷியம், பொட்டாசியம், மக்னீசியம், பீட்டா கரோன், வைட்டமின் சி, தயமின், பி6, போலேட், நார்சத்து என பல சத்துக்களை குவித்து வைத்திருக்கின்றது.

    வீக்கங்கள் குறைய உதவுகின்றது. குறிப்பாக மூட்டு வீக்கங்கள் உடையவர்கள் வலி, வீக்கம் குறைய இதனை எடுத்துக் கொள்ளலாம்.

    ஒரு கப் அன்னாசி பழத்தில் மிக அதிக வைட்டமின் 'சி' சத்து உள்ளது. அன்றாட தேவைக்கும் மிக கூடுதல் அளவில் கிடைக்கின்றது. நோய் பாதிப்பு குறையவும், நோய் எதிர்ப்பு சக்தி கூடவும் உதவுகின்றது.

    இந்த வைட்டமின் 'சி' சத்து கொலாஜன் புரோட்டின் உருவாக உதவுகின்றது. இந்த கொலாஜன் நமது எலும்பு, உறுப்புகள், ரத்த குழாய் சுவர்களுக்கு மிக முக்கியமானது. இதனால் காயங்களும் சீக்கிரம் ஆறுகின்றன.

    அன்னாசி பழத்தினில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், பீட்டா கரோட்டின், இருப்பதால் புற்று நோய் எதிர்ப்பு பழமாக பரிந்துரைக்கப்படுகின்றது.

    சளி, இருமல் குணமாகும்.

    கால்சியம் மற்ற தாது உப்புகளால் எலும்புகள் பலப்படுகின்றன.

    வயிற்றுப் போக்கு, கழிவுப் பொருள் வெளியேற்றத்தில் சிக்கல், குடல் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம் இவை அனைத்தும் சீராகிறது.

    கண் பார்வை கூர்மை பெறுகின்றது. முதுமையின் கண் தேய்மானம் போன்றவைகளை வெகு அளவில் சீர் செய்யும்.

    அன்னாசி பழம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அசிடிடி ஏற்படும்.

    அதிக தாது உப்புகளை உள் அடக்கியது அன்னாசி பழம். அதில் ஒன்று பொட்டாசியம். பொட்டாசியம் சத்து தேவையான அளவு இல்லாத பொழுது உயர் ரத்த அழுத்தம், ரத்த குழாய்களில் அழுத்தம், சிறு ரத்த உறைவுகள் ஆகியவை ஏற்படலாம். அடிக்கடி ஒரு கப் அளவு அன்னாசி பழம் சாப்பிடும் போது ரத்த குழாய்களின் இறுக்கம் தளிரும். உயர் ரத்த அழுத்தம் குறையும். ரத்த உறைவுகள் தடுக்கப்படும்.

    இதிலுள்ள காப்பர் சத்து சிகப்பு ரத்த அணுக்கள் உருவாகுவதில் பெரிதும் உதவுகின்றது. இதனால் உள் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கின்றது. நரம்பு கோளாறு, மறதி நோய் பாதிப்பு ஆகியவை வெகுவாய் கட்டுப்படுத்தப்படுகின்றன.

    இதில் உள்ள பிரோமிலெய்ன் கடின அசைவ உணவினைக் கூட எளிதாக்கி ஜீரணிக்கும் சக்தி கொண்டது. அதனால் நாள் ஒன்றுக்கு மனம் போனபடி ஒரு முழு அன்னாசி பழத்தினை எடுத்துக் கொள்ள வேண்டாம். இதனால் ஈறு, நாக்கு, உதடுகள் அதிக மிருதுவாக்கி 'உணர்திறனில்' பாதிப்பு ஏற்படும். மேலும் வயிற்றுப் பிரட்டல், வாந்தி, தலை வலி எனவும் ஏற்படும்.

    மேலும் பிரோமிலெய்ன் என்சைம் மாதவிடாய் போக்கினை ஊக்கப்படுத்தும் என்பதால் கர்ப்ப காலத்தில் இப்பழத்தினை தவிர்த்து விடுவது நல்லது.

    எதனையும் அதன் நன்மை தீமைகளை நன்கு அறிந்து குறிப்பிட்ட அளவில் உட்கொள்வதே சிறந்தது.

    எடை குறைய வேண்டும் என்பது அநேகருக்கு வாழ்நான் சாதனையாகவும் குறிக்கோளாகவும் ஆகி விட்டது. இதற்கென ஒரு தனி உலகமே உருவாகி விட்டது. உடற்பயிற்சி அவசியம் என்றாலும் உணவு முறையில் மாற்றம் என்பதில் 90 சதவீதம் கூட உள்ளது எனலாம். சில தவறான உணவுகளை அதாவது ஜன்க் புட், பாஸ்ட்புட் இவைகளை அடியோடு நீக்க வேண்டும். சாப்பிட வேண்டிய நல்ல உணவுகளை கட்டாயம் சாப்பிடவும் வேண்டும். வயிறு தொப்பை குறைந்து, எடை குறைய என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை மீண்டும் பார்ப்போம்.

    பீன்ஸ்- இதனை காயாகவோ, விதை, கொட்டை பிரிவு வகையிலோ எடுத்துக் கொள்ளலாம். அவரை விதை, சோயா, மொச்சை, ராஜ்மா இவைகளை எல்லாம் நம் ஞாபக சக்திக்காக இங்கேய சேர்த்து நினைவில் கொள்வோம். பலர் கூறுவது இவைகளை சாப்பிட்டால் வயிறு உப்புவது போல் உள்ளது என்கின்றனர். ஒரு கைப்பிடி அளவு என்பது போதும் இல்லையெனில், 2 டீஸ்பூன் அளவிற்கு அன்றாட உணவில் எதிலாவது சேர்த்து விடுங்கள். இதனால் அதிக சர்க்கரை, குறைந்த சர்க்கரை என்ற பிரச்சினைகள் இருக்காது. பசி தாக்கமும் குறையும்.

    மேலும் பருப்பு வகைகள், சற்று பச்சை பயிறு இவைகளை கண்டிப்பாய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    பேரிக்காய், ஆப்பிள் இரண்டுமே கலோரி சத்து குறைந்தவைதான். அதற்காக அதிகம் உண்ண வேண்டும் என்பதில்லை. குட்டி பசிக்கு இவை சிறந்தது. சத்தானதும் கூட.

    முழு தானிய உணவிற்கு வீக்கங்களை குறைக்கும் குணம் உண்டு. இருதய பாதிப்பினை குறைக்கும். பார்லி, முழு ஓட்ஸ், பிரவுன் அரிசி என இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாமே.

    சர்க்கரை வள்ளி கிழங்கு வீக்கத்தினை குறைக்க வல்லது. இருதயம், கண், ஜீரண உறுப்புகள் இவற்றிற்கு சிறந்தது. வேக வைத்து அளவோடு எடுத்துக் கொள்ளலாமே.

    மாதுளை பழம் வைட்டமின் 'சி', கே சத்து மற்றும் பொட்டாசியம், நார் சத்து நிறைந்தது, ரத்த ஓட்டத்தினை சீராய் வைக்க உதவுவது.

    முட்டை- ஒமேகா-3 சத்து, புரதம் நிறைந்தது. மாவுச் சத்தும் கலோரி சத்தும் குறைந்த உணவாகின்றது.

    பச்சை காய்கறி, கீரை வகைகள், தக்காளி போன்றவை நல்ல உணவாக அமையும்.

    கொட்டை வகைகள், புரதம், ஒமேகா-3, நார்சத்து கொண்டது. அன்றாடம் சிறிதளவு போதுமே.

    தேங்காய் எண்ணை தாளிப்பதற்கு பயன்படுத்தலாம். உங்கள் உடல் நிலையினை மருத்துவரிடம் அறிந்து செயல்படுங்கள்.

    சிறிதளவு (சிட்டிகை) பட்டை தூள் பயன்படுத்தலாம். கெட்ட கொழுப்பு நீங்கி விடும்.

    கொடை மிளகாய் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    இப்படி சாப்பிட்டுக் கொண்டே ஆரோக்கியமாக அளவான எடையோடு இருக்கலாமே.

    (உடல் நமக்கு இருக்கும் பாதிப்புகளின் அறிகுறியினை காட்டும். நாம் தான் கவனிக்கத் தவறி விடுகின்றோம்)

    * உடலில் வீக்கம் * வாயில் வாடை * அதிக அசிடிடி * நெஞ்சுவலி * அலர்ஜி போன்ற பாதிப்புகளுக்கு மருத்துவர் தகுந்த பரிசோதனைகளை செய்வார். அதிக கொலஸ்டிராலும் இத்தகு அறிகுறிகளை காட்டலாம். ஆகவே காலம் தாழ்த்தாமல் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    சுகாதாரமற்ற இடங்களில் ஆசை பட்டதை சிறுவர்கள் வாங்கி உண்பதால் ஓட்டுண்ணிகளால் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த தாக்குதல் பெரியவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. இதனை உடனடியாக சரி செய்யாவிடில் அநேக பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றது. இது காட்டும் அறிகுறிகள்

    * வயிறு வீக்கம் * வாயில் வாடை* வாந்தி * பசியின்மை * உப்பிசம் * ஒற்றை தலைவலி * ஆசன வாயில் அரிப்பு * வெளிப்போக்கில் ரத்தம் இப்படி இருக்கலாம்.

    உங்கள் குடும்ப நல மருத்துவர் இதனை எளிதில் சரி செய்து விடுவார். ஆனால் காலம் தாழ்த்தாது உடல் நலனுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    நம் முயற்சியாக * 2 காரட் துறுவி உண்பது ஒட்டுண்ணிகள் மேலும் பரவாது தடுக்கும்.

    * எலுமிச்சை சாறு + புதினா இலைகள் கலந்து ஜூஸ் செய்து குடிக்கலாம். * மிளகு தூள் சேர்த்த தக்காளி துண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    * பூண்டினை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். * ஓரிரு துண்டுகள் தேங்காய் உண்ணலாம்)

    சில உணவுகளை அவற்றின் அபரிமிதமான பயன் கருதி நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * பீன்ஸ்சில் உள்ள சில பொருட்கள் புற்று நோயினை கட்டுப்படுத்துவதில் வல்லது. பல பிரிவு புற்று நோய் பாதிப்பின் அபாயத்தினை வெகுவாய் குறைக்க வல்லது.

    * கருஞ்சீரகத்தினை சிறிதளவு அன்றாடம் சேர்த்துக் கொள்ள ஆச்சர்யப்படும் படியான நோய் எதிர்ப்பு சக்தியினைத் தருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கணைய நோய்களுக்கு இதனை பயன்படுத்துவது நல்ல முன்னேற்றத்தினை தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    * காரட்- பீட்டாகரோடின் சத்து நிறைந்தது. இதற்கு கண் பார்வை அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும் புற்று நோய் செல்களையும் கட்டுப்படுத்தும் மற்றும் தவிர்க்கும் என்றும் ஆய்வுகள் இன்று குறிப்பிடுகின்றன.

    * கிரீன் டீ -கல்லீரலை சுத்தப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி என குறிப்பிடும் போது புற்று நோய் பாதிப்பினை வெகுவாய் தவிர்க்கும் முறையாக குறிப்பிடுகின்றனர். * மாதுளை, தக்காளி, மஞ்சள் இவை அனைத்துமே நம் உணவு பழக்கத்தில் சிறிதளவு அன்றாடம் சேர்ப்பது நல்லது.

    வாழ்க்கை இவ்வளவுதான்

    இப்படி பார்த்து பார்த்து உணவில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமா? வாழ்க்கை முறையிலும் நம் கவனத்தினை செலுத்தி முன்னேற வேண்டும். பலரின் கருத்துக்களை கேட்பது நமக்கு ஒரு வழி காட்டியாக அமையும்.

    வாழ்வில் கொஞ்சம் 'ரிஸ்க்' எடுக்க வேண்டியது அவசியம்தான். அதற்காக ஆழம் தெரியாமல் இரண்டு கால்களையும் ஆற்றில் வைக்க கூடாது.

    சம்பாதிப்பதில் முதலில் சேமிப்பதற்கு எடுத்து வைத்து விட்டு பின்னர் செலவழியுங்கள்.

    ஒரு வருமானமாக இருந்தால் மனைவி மற்றும் உறவுகள் மூலம் வருமானத்திற்கு வழி செய்ய வேண்டும்.

    நேர்மை என்பது விலைமதிப்பற்றது. அதனை அனைவரிடமும் எதிர்பார்க்க கூடாது.

    40 வயது ஆகும் பொழுது மிக அதிகம் படித்தவரும் சற்று குறைவாய் படித்தவரும் ஒரே மாதிரிதான். குறைவாய் படித்தவர் அதிகம் படித்தவரை விட குறைவாய் சம்பாதிக்கலாம்.

    50 வயதில் அழகு, அழகின்மை இரண்டும் ஒன்றுதான். எத்தனை மேக்அப்பும் கரும்புள்ளி, சுருக்கங்களை மறைக்கப் போவதில்லை.

    60 வயதில் உயர் பதவி, தாழ்வு பதவி எல்லாம் ஒன்றுதான். ஓய்வு பெற்ற பின் அவரது உதவியாளர் கூட ஒருவரை தவிர்ப்பார்.

    70 வயதில் வீடு பெரிதோ, சிறியதோ இருந்தால் என்ன! மூட்டு வலி மற்றும் பல நோய்கள் ஒருவரை நடக்கவே விடுவதில்லை.

    80 வயதில் பணம் இருந்தால் கூட எப்படி செலவழிப்பது என்று தெரியாது. இதுதான் வாழ்க்கை.

    Next Story
    ×