search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நான்கு மாதத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
    X

    நான்கு மாதத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

    • இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கையில் இருந்து கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கஞ்சா, புகையிலை பொருட்கள், கடல் அட்டை போன்றவை கடத்தலின்போது அதிக அளவில் சிக்கி உள்ளன. ஆனால் அண்மை காரணமாக தங்க கட்டிகளை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு தங்க கட்டிகளை கடத்தி வருபவர்கள் கடலில் அதிகாரிகள் ரோந்துவரும்போது பார்சலை அவர்களுக்கு தெரியாமல் கடலில் வீசி விடுகிறார்கள். கடத்தல்காரர்கள் வீசும் பார்சலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படுகிறது.

    எனவே தைரியமாக கடலில் அதனை வீசும் கடத்தல்காரர்கள், அதிகாரிகள் சென்ற பின் ஆழ்கடலில் குதித்து ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் எடுத்து செல்கிறார்கள். ஆனால் இந்த முறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக கடலில் வீசப்பட்ட 11 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 4 மாதங்களில் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பி கடத்தல்காரர்கள் 100 கிலோவுக்கும் மேல் தங்க கட்டிகளை கடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×