search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடும் குளிரால் பயணிகள் வருகை குறைந்தது- சென்னையில் 6 விமானங்கள் ரத்து
    X

    கடும் குளிரால் பயணிகள் வருகை குறைந்தது- சென்னையில் 6 விமானங்கள் ரத்து

    • கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
    • சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    அதேபோல் ஐதராபாத்தில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.

    இலங்கையில் இருந்து வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 2 மணிக்கு, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து, அதிகாலை 3.15 மணிக்கு, இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். அந்த இரு விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்னை விமான நிலையத்தில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதற்கு காரணம் இரவு நேரம் கடுமையான குளிர் நிலவுகிறது. எனவே இரவு விமானங்களிலும், அதிகாலை விமானங்களிலும், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதேபோல் நேற்று இரவு ஐதராபாத் மற்றும் கொல்கத்தா செல்ல வேண்டிய 2 விமானங்களும், இன்று அதிகாலை ஐதராபாத், கொல்கத்தா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து புறப்பாடு, வருகை ஆகிய 6 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பெரிய ரக விமானங்கள் அதற்குத்தகுந்த, பயணிகள் எண்ணிக்கை இல்லாமல், மிகவும் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், விமானங்களை காலியாக இயக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

    இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×