என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருப்பூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்து- சிறுமி பலி
- திருப்பூர் அவினாசி பாளையம் பல்லடம் சாலையில் செல்லும்போது திடீரென நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
- மரத்தில் கார் மோதி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருச்சி நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து கோவை ஈஷா யோகா மையத்திற்கு புறப்பட்டார்.
திருப்பூர் அவினாசி பாளையம் பல்லடம் சாலையில் செல்லும்போது திடீரென நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகள் கிருத்திகா (வயது11) உள்ளிட்ட 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமி கிருத்திகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக அவினாசி ப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கார் மோதி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்