search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது
    X

    மாமல்லபுரத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது

    • மாமல்லபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • வாகன சோதனையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் பிடிபட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவர்கள் இருவரும் கஞ்சா வியாபாரிகளான செங்கல்பட்டு திம்மராஜகுளம் பகுதியை சேர்ந்த அருள், மாமல்லபுரம் அடுத்த மணமையை சேர்ந்த குருமூர்த்தி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, ரூ.13 ஆயிரம் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×