search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2-ம் கட்டமாக முல்லைபெரியாறு அணையில் நிலநடுக்க கருவி பொருத்த தேசிய புவியியல் மைய விஞ்ஞானி ஆய்வு
    X

    2-ம் கட்டமாக மற்ற 2 இடங்களில் கருவி பொருத்துவதற்கு மீண்டும் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

    2-ம் கட்டமாக முல்லைபெரியாறு அணையில் நிலநடுக்க கருவி பொருத்த தேசிய புவியியல் மைய விஞ்ஞானி ஆய்வு

    • முல்லைபெரியாறு அணை தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
    • 2-ம் கட்டமாக மற்ற 2 இடங்களில் கருவி பொருத்துவதற்கு மீண்டும் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14707 ஏக்கர் விவசாய நிலங்களில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    இதன் உறுதிதன்மை குறித்து பலமுறை நிருபிக்கப்பட்ட பின்னரும் கேரள அரசு நிலநடுக்க ஆபத்து இருப்பதாக புகார் கூறி வந்தது. இதனை தொடர்ந்து அணையை ஆய்வு செய்ய மத்திய கண்காணிப்பு குழுவினர் வந்தனர். அப்போது இதுகுறித்து அவர்களிடம் கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அணைப்பகுதியில் நில அதிர்வு மானிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி 23-ந்தேதி தேசிய புவியியல் ஆய்வு மைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் முல்லைபெரியாறு அணை மேல்பகுதியில் நிலஅதிர்வு கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டது.

    இதில் பதிவாகும் அதிர்வலைகள் செயற்கைகோள் மூலமாக ஐதராபாத்தில் உள்ள தேசிய புவியியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வரைபடமாக கிடைக்கிறது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக மற்ற 2 இடங்களில் கருவி பொருத்துவதற்கு மீண்டும் விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு பொருத்தும் பணி நடைபெற்றது.

    அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவிசெயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், நவீன்குமார், முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அதிகாரிகள் தேக்கடியில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை கண்ணகி படகில் அணைக்கு சென்றனர். முல்லை பெரியாறு அணையில் நிலஅதிர்வு கருவிகள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிலநடுக்க ஆபத்து குறைவாகவே உள்ளது. எனவே அணை பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் முல்லைபெரியாறு அணை மேல்பகுதியில் நிலஅதிர்வு கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டது.

    Next Story
    ×